Visali Sriram

· 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...53.

1960,ீபாவளி ரிலீஸ்"மன்னாதி மன்னன்"...புரட்சித் தலைவர்,அஞ்சலி அம்மா,பப்பிம்மா,பி.எஸ்.வீரப்பா பிரதானப் பாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கும் அருமையான படம்...கதை கவியரசர்...பாடல்கள் கவியரசர்,மருதகாசி...இந்தப் பாடல் கவியரசர்...மன்னனிடம் காதல் கொண்ட ஆடல் நாயகி....நாட்டுக்காக மன்னனையே துறக்கும் சோகப் பாத்திரம் பப்பிம்மாவுக்கு....பாடல்.."கண்கள் இரண்டும் "......

சோகம் ,ஆனால் இனிமையால் சோகம் கூட இதமாக இருக்கும்....கவியரசர் வரிகள்,மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் அம்மா....கூட ஒரு அழகு சேர்க்க காட்சியில் பத்மினியம்மாவும்...புரட்சித்தலைவரும்....மன்னாதி மன்னன் படத்திலிருந்து கண்கள் இரண்டும்...

.இந்தப் பாடலின் ஆரம்பமே ஒரு அபாரமான தொகையறா....அந்த ஸ்ருதியில் அவ்வளவு இனிமையாக தெளிவாக சுசீலாம்மாவால் மட்டும்தான் பாடமுடியும்....பதறி சிவந்ததே நெஞ்சம்......பாடும்போதே பதற்றம் தெரியும்...படத்தில் பத்மினியின் முகபாவம்..உதட்டசைவு....அதற்கு இன்னும் மெருகு....வழிபார்த்து சிவந்ததே கண்கள்.....கதறிச் சிவந்ததே வதனம்...கலங்கி, நடுங்கி ,குலைந்ததே மேனி....மேனி......இந்த இடத்தை பாடி இருக்கும் அழகை சொல்ல தமிழில் வார்த்தையில்லை

!பாடலின் சிறப்பு காலப்ரமாணம்...என்ன வேகம்....அதற்கு ஈடாக தாளம்...அந்த ரிதம்...அற்புதம்...காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் சேர்க்குமோ?இந்த சந்தேகத்தை அந்த" இனிமேலில்" பாடி இருக்கும் சங்கதி சொல்லும்....நல்ல ஹை பிட்ச் பாடல்...எல்லாமே மேல் பிரயோகங்கள்...

.பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்...பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்....கவியரசர்....சொல்லணுமா?ென்ற இடம் காணேன்..சிந்தை வாடலானேன்...

சேதி சொல்ல யாரும் தூது செல்ல காணேன்....கல்லும் கரையும் அவளின் நிலை:(

நின்ற இடம் யாவும் நிழல் போல தோணுதே.. அன்று சொன்ன வார்த்தை... ...வார்த்தை அலை போல மோதுதே....சொல்லாடல்..அருமை அருமை....கணையாழி இங்கே...மணவாளன் அங்கே...என்ன ஒரு கவித்துவமான வரிகள்... காணாமல் நானும் உயிர்வாழ்வதெங்கே??? என்று பாடி நிறுத்தும் போது ஒரு பெரிய புயல் அடித்து சிதலமான ஒரு மாளிகை போல ஒரு காட்சியை கண்முன்னே விரித்துக் காட்டும் பாடல்.....உங்களுடன்........http://www.youtube.com/watch?v=Wcfb2jFteZo