Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...66.

1960...கைராசி..கவியரசர் வரிகளுக்கு இசைக் கூட்டி இருப்பவர் திரு.கோவர்தனம் மாஸ்டர்.எல்லாப் பாடல்களும் அருமை..இப்போது.."காத்திருந்தேன்"

சரோஜா தேவி நர்ஸ்..டாக்டர் ஜெமினியைக் காதலிக்கிறார்..சரோஜாதேவியின் வளர்ப்புத் தாய் எம்.வி.ராஜம்மா..

காதல் கனியும் சமயமும் வருகிறது...திருமண நாள் கூடக் குறித்தாகி விட்ட வேளையில் பூரிப்பில் பிறக்கிறது பாடல்.

"காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்..பார்த்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா!!!"

பாடலைப் பாடி இருப்பது சுசீலாம்மா...காத்திருந்தேன்...என்று மென்மையாக ஆரம்பிக்கும் பொழுதே விழுந்து விடுவோம் அந்தக் குரலுக்கு...காலமெல்லாம் காத்திருந்தேன்....அந்த நீண்ட காத்திருப்பை இதை விட அழகாக சொல்லவே முடியாது..பார்த்திருந்த காலமெல்லாம்...அதில் இரண்டாம் முறைப் பாடும் போது ஒரு நறுக் சங்கதி ஆஹா...கனிந்ததம்மா..ஆ.ஆ..ஆ..

சரோஜா தேவியின் அழகைப் பற்றிச் சொல்லவில்லையென்றால் எனக்கு கண்ணில்லை என்றுதான் அர்த்தம்....காத்திருக்கும் நீள்விழிகளும்...அதற்கு ஏற்ற விழி அசைவும்...பாடல் சாகா வரம் பெற்றதற்கு இதுவும் ஒரு காரணம்.

"காதல் உன்பால் இல்லையென்றால் கன்னி உள்ளம் கருகி விடும்...தேதி வைத்து சேதி சொன்னால் தாயின் முகம் மறந்துவிடும்...தங்க மகள் கூந்தலுக்குத் தாய் முடித்துப் பூவும் வைப்பாள்..

மங்கை மணம் முடித்து விட்டால் மணவாளன் பூ முடிப்பான்"

இது சரணம்..

காதல் இல்லையென்றால் கன்னி உள்ளம் கருகி விடும்...கவியரசரின் சொல்லாடல்...உள்ளம் பூ மாதிரி மென்மையானது...அது சுருங்கினால் கருகிவிடுமாம்..அதுவே திருமணம் முடிவாகித் தேதி குறித்தால் தாயின் முகம் கூட மறந்து விடுமாம்.திருமணம் ஆகும் வரை தாயார் தலை வாரிப் பின்னலிட்டு பூ முடிப்பாள்..திருமணம் ஆகி விட்டால் கணவன் பூ முடிப்பானாம்..

தேதி வைத்து சேதி சொன்னால்....இந்த சொன்னாலில் ஒரு சங்கதி...அது பற்றி சொல்லவில்லையென்றால் இந்தப் பாடல் பின் தொடர்ந்து செல்வதில் அர்த்தமே இல்லை.அதே மாதிரி மணவாளன் பூ முடிப்பான்...பான்...அதை நிறுத்தி பாடி இருக்கும் அழகு....

அடுத்த சரணம்"நாம் விரும்பிப் பிறப்பதில்லை

பெற்றவளே வளர்ப்பதில்லை

தாம் விரும்பி மணமுடிப்பார்

தம் உயிரில் நமை வளர்ப்பார்

காதலிலேத் தோல்வி கண்டோர் கதைகளை நாம் படித்ததுண்டு..

காதலிலே வெற்றி கண்ட கன்னி என் போல் யாவருண்டு...?"

காதலிலே தோல்வி கண்டவர் கதைகளை நாம் படித்ததுண்டு....இதைப் பாடும் போது ஒரு சோகம் குரலில்...அடுத்தவரி..காதலிலே வெற்றி கண்ட கன்னி என்போல் யாவருண்டு???இது பாடும் போது ஒரு சந்தோஷம்...ஜெயிச்ச பெருமிதம் குரலில்....

எளிய பாடல்தான் என்றாலும் "டயனாமிக்ஸ்"என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்...அது மாதிரிக் குரலில் ஒரு ஆளுமை...இவர் போல் எவருக்குண்டு.....தொடர்ந்தே செல்கிறேன்......உங்களோடு..https://www.youtube.com/watch?v=TSrZokr2Zag